Thursday 2nd of May 2024 07:38:19 AM GMT

LANGUAGE - TAMIL
-
வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது!

வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது!


வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் இரண்டு இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அன்டிஜன் பரிசோதனைகளின் பின்னர் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஊடாக மீனவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக நீரியல்வளத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE